search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுத்திகரிப்பு மையம்"

    • கீழக்கரையில் கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் எற்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
    • சாக்கடை நீர் சுத்திகரிக்கப்படாமல் நேரடியாக கலப்பதால் அந்த பகுதியில் மட்டும் கடலின் நிறம் மாறியுள்ளது.

    கீழக்கரை

    கீழக்கரை நகராட்சியில் 50 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். அனைத்து வீடுகளிலிருந்தும் வெளியேறும் கழிவுநீர் சுத்திகரிக்கப்படாமல் நகராட்சியால் சாலை ஓரங்களில் அமைக்கப்பட்டுள்ள வடிகால் வாய்க்கால் மூலமாக நாள்தோறும் 10 வட்சம் லிட்டர் கழிவுநீர் கடலில் நேரடியாக கலக்கிறது. பல ஆண்டுகளாக எத்தனையோ நகராட்சி நிர்வாகம் மாறிவிட்டாலும் இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண முடியவில்லை.

    தேர்தல் நேரத்தில் வாக்குறுதி அளிக்கும்வேட்பாளர்கள் வெற்றி பெற்றதும் மறந்து விடுகின்றனர். சாக்கடை நீர் சுத்திகரிக்கப்படாமல் நேரடியாக கலப்பதால் அந்த பகுதியில் மட்டும் கடலின் நிறம் மாறியுள்ளது. இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு கடல் நீர் மாசடைந்து மீன்வளம் முற்றிலுமாக அழிவதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே கீழக்கரையில் கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் எற்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    ×